ஷா ஆலாம்: மார்ச் 7;-அலோர் காஜா, கம்போங் லெண்டு, ஜாலான் லெண்டுவில் இன்று காலை 10 டன் லாரியுடன் மகிழுந்து மோதிய விபத்தில் இராணுவ வீரர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இன்று காலை சுமார் 10 மணியளவில் நிகழ்ந்த இவ்விபத்தில், பெரோடுவா மைவி மகிழுந்தை ஓட்டிச் சென்ற 25 வயதுடைய மலாய் ஆடவர், ஓட்டுநர் இருக்கையில் சிக்கிக்கொண்டார்.
இச்சம்பவம் குறித்து மலாக்கா தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் (JBPM) மக்கள் தொடர்பு அதிகாரி, துணை தீயணைப்பு கண்காணிப்பாளர் II முகமட் ஹஃபிட்ஸாதுல்லா ரஷிட் கூறுகையில், காலை 10.10 மணியளவில் தங்களுக்கு அவசர அழைப்பு கிடைத்ததாகத் தெரிவித்தார்.
"அலோர் காஜா தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்திலிருந்து ஒரு குழுவினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அங்கு பெரோடுவா மைவி மகிழுந்தும், 10 டன் ஹினோ ரக லாரியும் விபத்துக்குள்ளானது கண்டறியப்பட்டது."
"மகிழுந்தின் ஓட்டுநர் பகுதியில் சிக்கியிருந்த 25 வயது இராணுவ வீரரை மீட்க சிறப்பு உபகரணங்கள் பயன்படுத்தப்பட்டன," என்று அவர் ஒரு அறிக்கையில் கூறினார்.
சுகாதார அமைச்சகத்தின் (KKM) மருத்துவக் குழுவினர் அந்த ஆடவர் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டதை உறுதி செய்தனர்.
"பின்னர், உயிரிழந்தவரின் உடல் மேலதிக நடவடிக்கைகளுக்காக காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது. மீட்புப் பணிகள் காலை 11.06 மணியளவில் முழுமையாக நிறைவடைந்தன," என்று அவர் மேலும் கூறினார்.
லாரியுடன் மகிழுந்து மோதல்: இராணுவ வீரர் சம்பவ இடத்திலேயே பலி
7 மார்ச் 2026, 12:54 PM
தொடர்புடைய செய்திகள்
selangor
இஸ்லாமியர்களின் மனதைப் புண்படுத்தும் காணொளியைப் பதிவேற்றிய இ-ஹெய்லிங் ஓட்டுநருக்கு ரிம 4,000 அபராதம்
Pakiya
17 மார்ச் 2026

selangor
கிள்ளானில் 80 ஆதரவற்றோர், சிறப்புத்தேவையுடைய சிறுவர்களுக்கு எம்.பி.டி.கே உபசரிப்பு
Pakiya
17 மார்ச் 2026

selangor
சட்டவிரோத மறுசுழற்சி தொழிலதிபருக்கு MBDK இடத்தை காலி செய்ய அறிவிப்பு
Pakiya
11 மார்ச் 2026

selangor
‘SAMA’ எனப்படும் சிறப்பு பிரச்சாரத்தை மீடியா சிலாங்கூர் அறிமுகப்படுத்தியுள்ளது
Shalini Rajamogun
12 பிப்ரவரி 2026

உங்கள் கருத்து என்ன?




