தஞ்சோங் காராங் கடல் பகுதியில் இரண்டு இந்தோனேசிய மீனவப் படகுகள் தடுத்து நிறுத்தம்

8 ஜனவரி 2026, 8:02 AM
தஞ்சோங் காராங் கடல் பகுதியில் இரண்டு இந்தோனேசிய மீனவப் படகுகள் தடுத்து நிறுத்தம்

ஷா ஆலம், ஜனவரி 8: மலேசிய கடல்சார் அமலாக்கப் பிரிவு (APMM) சிலாங்கூர், தஞ்சோங் காராங் கடல் பகுதியில் மீன்பிடித்த இரண்டு இந்தோனேசிய மீனவப் படகுகளை நேற்று தடுத்து நிறுத்தியது.

நேற்று பிற்பகல் 2.30 மற்றும் 3.30 மணியளவில் தஞ்சோங் காராங்கிற்கு தென்மேற்கே சுமார் 17.9 மற்றும் 18.2 கடல் மைல் தொலைவில் தடுத்து நிறுத்தப்பட்டதாக சிலாங்கூர் கடல்சார் இயக்குநர், கடல்சார் கேப்டன் அப்துல் முஹைமின் முகமட் சல்லே கூறினார்.

வழக்கமான ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தபோது, இழுவலைகளைப் பயன்படுத்தி மீன்பிடித்துக் கொண்டிருந்த இரண்டு படகுகளைத் தங்கள் தரப்பு கண்டறிந்ததாகத் தெரிவித்தார். "முதற்கட்ட விசாரணையில், முதல் படகில் ஒரு படகோட்டியும் இரண்டு ஊழியர்களும், இரண்டாவது படகில் ஒரு படகோட்டியும் மூன்று ஊழியர்களும் இருந்தது தெரியவந்தது.

"அவர்கள் அனைவரும் 36 முதல் 53 வயதுக்குட்பட்டவர்கள். அனைத்து ஊழியர்களும் செல்லுபடியாகும் அடையாள ஆவணங்களையோ அல்லது வேலை அனுமதிப்பத்திரங்களையோ சமர்ப்பிக்கத் தவறிவிட்டனர் என்றும் அவர் கூறினார். இதனைத் தொடர்ந்து அவர்கள் அனைவரும் மேலதிக விசாரணைக்காக பூலாவ் இண்டாவில் உள்ள கடல்சார் காவல் படைத் துறைமுகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். சுமார் 150 கிலோகிராம் எடையுள்ள கலப்பு மீன்களும் பறிமுதல் செய்யப்பட்டதாக அவர் கூறினார்.

இந்த வழக்கு 1985ஆம் ஆண்டு மீன்பிடிச் சட்டம் மற்றும் 1959/63ஆம் ஆண்டு குடிவரவுச் சட்டம் ஆகியவற்றின் கீழ் விசாரிக்கப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.

Properties
MS: f922288e558c3b7b1d99bd47484377b4
EN: cd68e718a4d41dc8ef70c9d27c60e1f1
ZH: 100cdec69db9bc7fd9f175cab704a072
TA: 7b60ca9b9b7a9838dc33c5db6fb6f38c
TV-MS: 5c53513d790774360d169f98c36ce619