வெள்ளத்தில் பாதிக்கப் பட்டோர் உதவித்தொகை பெற PPS-ல் பதிவு செய்ய- அறிவுறுத்தல்

29 நவம்பர் 2025, 9:51 AM
வெள்ளத்தில் பாதிக்கப் பட்டோர் உதவித்தொகை பெற PPS-ல் பதிவு செய்ய- அறிவுறுத்தல்
வெள்ளத்தில் பாதிக்கப் பட்டோர் உதவித்தொகை பெற PPS-ல் பதிவு செய்ய- அறிவுறுத்தல்

ஷா ஆலம், நவம்பர் 29 — வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்கள் தற்காலிக நிவாரண மையங்களில் (PPS) தங்கி பதிவு செய்தால் மட்டுமே RM1,500 உதவித்தொகை கிடைக்கும் என்பதால் இவ்வாறு செய்யுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள் என்று பேரழிவு மேலாண்மை துறை பொறுப்பாளர் மாநில நிர்வாக சபை உறுப்பினருமான முகமட் நஜ்வான் ஹாலிமி தெரிவித்தார்.

இந்த உதவித் தொகையில் மாநில அரசிடமிருந்து RM500-ம், தேசிய பேரிடர் மேலாண்மை நிறுவனம் (NADMA) மூலம் RM1,000-ம் அடங்கும். இது PPS-ல் பதிவு செய்யப்பட்டு தங்கியுள்ள பாதிக்கப் பட்டவர்களுக்கு மட்டுமே வழங்கப்படும் என்று அவர் கூறினார்.

“பதிவு செய்து PPS-ல் தங்கியிருக்க வேண்டும் என்பது நிபந்தனை. சிலர் உறவினர்கள் அல்லது நண்பர்கள் வீடுகளில் தங்கியுள்ளனர்… அவர்களை கண்டறிந்து உதவி வழங்குவது கடினம். PPS-ல் இருப்பவர்களின் தகவல்கள் எங்களிடம் இருப்பதால் உதவி வழங்குவது எளிதாகிறது.

“எனினும் PPS-ல் இல்லாதவர்களுக்கு மிக அவசரத் தேவை இருந்தால் நாங்கள் ஆராய்ந்து உதவ முயற்சிப்போம். எங்களால் முடிந்த அளவுக்கு உதவி செய்வோம். ஆனால் அனைவரும் PPS-ல் பதிவு செய்வதே சிறந்தது” என்று இன்று இங்கு செல்பிஸ் (Selangor Entrepreneur Expo) தொடக்க விழாவுக்குப் பிறகு செய்தியாளர்களிடம் அவர் கூறினார்.

வெள்ள உதவிகள் ஒருங்கிணைப்பதற்காக உயர்மட்ட அதிகாரிகள், துறைத் தலைவர்கள், மாவட்ட அதிகாரிகள், உள்ளூராட்சி அதிகாரிகள் உள்ளிட்டோரின் விடுமுறைகள் டிசம்பர் 15 வரை ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் நஜ்வான் தெரிவித்தார்.

“எதிர்பாராத அவசர நிலைமை ஏற்படலாம் என்ற அச்சம் உள்ளது. அதிகாரிகள் இங்கேயே இருந்தால் பணிகள் சுமூகமாக நடைபெறும். அதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இதை செய்கிறோம். அனைத்து பாதிக்கப் பட்டவர்களுக்கும் சிறந்த ஒருங்கிணைப்பு வேண்டும் என்று விரும்புகிறோம்.

மாநில அரசு தொடர்ந்து வெள்ள நிலையை கண்காணித்து வருகிறது. இன்று பல மாநில நிர்வாக சபை உறுப்பினர்கள் நிவாரண மையங்களுக்குச் சென்று பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து ஆறுதல் கூறினார்கள்” என்றார்.

வெள்ளம் வடிந்த பிறகு நடைபெறும் சுத்தம் செய்யும் பணிகளைப் பற்றி பேசிய கோத்தா அங்கெரிக் சட்டமன்ற உறுப்பினர் நஜ்வான், டீம் சிலாங்கூர் மற்றும் சிலாங்கூர் தன்னார்வலர்கள் (SERVE) குழுக்கள் பள்ளிவாசல்கள், சூராவ்கள், சமுதாயக் கூடங்கள் போன்ற பொது இடங்களை மட்டுமே சுத்தம் செய்யும் பணியில் ஈடு படுத்தப் படுவதாக தெரிவித்தார்.

“குடியிருப்பு வீடுகளைப் பொறுத்தவரை பல்வேறு காரணங்களைக் கருத்தில் கொள்ள வேண்டும்… சிலர் வெளியாட்கள் வீட்டுக்குள் வருவதை விரும்புவதில்லை. அதனால் தன்னார்வலர்களின் பணிகளை பொது இடங்கள் சுத்தப் படுத்தலுக்கு மட்டுமே நிர்ணயித்துள்ளோம்” என்றார்.

சமூக நலத்துறையின் இன்போபென்சானா இணையதள தகவலின்படி, சிலாங்கூரில் தற்போது 1,225 குடும்பங்களைச் சேர்ந்த 4,416 பேர் 33 நிவாரண மையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இதில் கோலாசிலாங்கூரில் 14, சிப்பாங்கில் 9, கோலா லங்காட்டில் 5, சபாக் பெர்ணமில் 3, கிள்ளானில்  2 மையங்கள் செயல்படுகின்றன.

செல்பிஸ்: 100-க்கும் மேற்பட்ட வணிகர்கள் பங்கேற்பு, மூன்று நாட்களில் RM 1 மில்லியன் பரிவர்த்தனை இலக்குஷா ஆலம், நவம்பர் 29 — 100-க்கும் மேற்பட்ட உள்ளூர் வணிகர்களை ஒருங்கிணைத்துள்ள  சிலாங்கூர்  தொழில் முனைவோர் கண்காட்சி (SelBiz) மூன்று நாள் நிகழ்ச்சியில் RM 1 மில்லியன் வரை பரிவர்த்தனை மதிப்பை எட்டும் என எதிர்பார்க்கப்படுவதாக இளைஞர், விளையாட்டு மற்றும் தொழில் முனைவோர் துறை மாநில நிர்வாக சபை உறுப்பினர் முகமட் நஜ்வான் ஹாலிமி தெரிவித்தார்.2022-ஆம் ஆண்டு முதல் இதுவரை நடைபெற்ற இதுபோன்ற நிகழ்வுகளில் மொத்தம் கிட்டத்தட்ட RM 10 மில்லியன் பரிவர்த்தனை பதிவாகி உள்ளதால் இந்த இலக்கு யதார்த்தமானது என்று அவர் கூறினார்.“செல்பிஸின் நான்காவது பதிப்பில் 25,000-க்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கிறோம். தொழில் முனைவோர்களுக்கான விற்பனை இடம் மட்டுமல்லாமல், நிதி நிறுவனங்கள், மாநில அரசு நிறுவனங்கள், உயர்கல்வி மையங்களையும் இணைத்து வணிக வலையமைப்பை விரிவு படுத்தியுள்ளோம்.இந்த ஆண்டு  சிலாங்கூர் மாநில வளர்ச்சிக் கழகம் (PKNS) தொழில் முனைவோரின் தற்போதைய முக்கிய தேவையான தொழில்நுட்ப ஆற்றல், டிஜிட்டல் மயமாக்கல் மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) ஆகியவற்றில் கவனம் செலுத்துகிறது” என்று இன்று ஷா ஆலம் மாநாட்டு மையத்தில் செல்பிஸ்  நிகழ்வை தொடக்கி வைத்து அவர் பேசினார்.மாநிலத்தில் பெரும்பாலான தொழில் முனைவோர், பிளாட்பார்ம்   சிலாங்கூர்   (PLATS),  சிலாங்கூர்   இளைஞர் சமூகம் (SAY), யயாசான் ஹிஜ்ரா  சிலாங்கூர்   உள்ளிட்ட பல்வேறு மாநிலத் திட்டங்கள் மூலம் தற்போதைய தொழில்நுட்பங்களுக்கு உயர்மட்டத் தகவலமைப்பைக் காட்டியுள்ளதாக நஜ்வான் கூறினார்.“சிறு வியாபாரிகள் உட்பட தள்ளுவண்டிக் கடைக் காரர்களில் கிட்டத்தட்ட 90 விழுக்காட்டினர் இப்போது டிஜிட்டல் பரிவர்த்தனைகளைப் பயன்படுத்துகின்றனர். சந்தைத் தேவைக்கு ஏற்ப அனைவரும் மாற வேண்டும் என்பதே எங்கள் விருப்பம்; அதற்கு சிறிது காலம் ஆகலாம்” என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.செல்பிஸ் வெறும் விற்பனைத் தளம் மட்டு மல்ல; வியாபாரப் பேச்சுகள், வழிகாட்டுதல் அமர்வுகள், தொழில் பகிர்வு நிகழ்வுகள், குடும்பத்துடன் மகிழக்கூடிய பொழுதுபோக்குகளையும் உள்ளடக்கியது என்று அவர் தெரிவித்தார்.“தொழில்முனைவோரை மேம்படுத்துவ தோடு, உள்ளூர் மக்கள் குடும்பத்துடன் மகிழ நேரம் செலவிடக் கூடிய இடமாகவும் இந்தக் கண்காட்சி அமைய வேண்டும் என்பதே எங்கள் நோக்கம்” என்றார் நஜ்வான்.200-க்கும் மேற்பட்ட அதிர்ஷ்டக் குலுக்கல் பரிசுகள், முதன்மைப் பரிசாக 5 நாள் பயணக் கப்பல் பயணம், டயாங் நூர்ஃபைசா, அதிரா சுஹைமி, பிளாக் ஹனிபா, ஸாருல் அம்ப்ரெல்லா போன்ற பிரபல கலைஞர்களின் நிகழ்ச்சிகளும் செல்பிஸில் இடம்பெற்றுள்ளன.2022-இல் PKNS அறிமுகப்படுத்திய செல்பிஸ், சிறு மற்றும் நடுத்தர தொழில்களை (SMEs) வலுப்படுத்தவும், உள்ளூர் பொருட்களை பரந்த சந்தைக்கு கொண்டு செல்லவும், சிலாங்கூரின் தொழில் முனைவோர் சூழலை வலுப்படுத்தவும் உதவும் மூலோபாய தளமாகும்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.

Properties
MS: f922288e558c3b7b1d99bd47484377b4
EN: cd68e718a4d41dc8ef70c9d27c60e1f1
ZH: 100cdec69db9bc7fd9f175cab704a072
TA: 7b60ca9b9b7a9838dc33c5db6fb6f38c
TV-MS: 5c53513d790774360d169f98c36ce619