ஷா ஆலாம், நவ 14- சிலாங்கூர் மாநிலத்தின் நிதி கையிருப்பானது RM 4.8 பில்லியன் ரிங்கிட்டாக உயர்வு கண்டுள்ளது. சிலாங்கூர் மாநில மந்திரி புசார் டத்தோ ஶ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.
சிலாங்கூர் மாநிலத்தின் நிதி இருப்பு தொடர்ந்து வலுப்பெற்று வருகிறது இந்த ஆண்டில் இந்த ஆண்டில் RM706.23 மில்லியன் அதிகரித்து, RM4.839 பில்லியனை எட்டியுள்ளது.
மாநிலச் சட்டமன்றத்தில் 2026 ஆம் ஆண்டுக்கான சிலாங்கூர் பட்ஜெட்டை தாக்கல் செய்த போது அவர் இதனைத் தெரிவித்தார்.
2018 ஆம் ஆண்டு முதல், சவாலான பொருளாதாரச் சூழல் மற்றும் உலகளாவிய நிச்சயமற்ற நிலைமைகள் இருந்தபோதிலும், மாநிலத்தின் இருப்பு RM2.703 பில்லியன் அளவுக்கு வளர்ச்சி கண்டு, சீரான மேல்நோக்கிய போக்கைப் பராமரித்து வருகிறது.
சிலாங்கூரின் மொத்த இருப்பில், ஒருங்கிணைந்த வருவாய் கணக்கு RM1.608 பில்லியனையும், ஒருங்கிணைந்த அறங்காவலர் கணக்கு RM3.23 பில்லியனையும் கொண்டுள்ளது.
இந்த ஆண்டு இதுவரையில், மாநிலம் RM2.495 பில்லியன் வருவாயை வசூலித்துள்ளது, இது 2025 ஆம் ஆண்டின் இலக்கான RM2.35 பில்லியனில் 106.17% ஆகும். 2019 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் இலக்கு வருவாய் தாண்டப் பட்டுள்ளது.
மொத்த வசூலில், வரி வருவாய் RM733.28 மில்லியனாகவும், வரி அல்லாத வருவாய் RM1.504 பில்லியனாகவும், வருவாய் அல்லாத வரவுகள் RM257.72 மில்லியனாகவும் உள்ளன.
இந்த ஆண்டின் இறுதிக்குள் மொத்த வருவாய் RM2.7 பில்லியனை தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சிலாங்கூர் மாநில நிதி கையிருப்பு RM 4.8 பில்லியன் ரிங்கிட்டாக உயர்வு- டத்தோஶ்ரீ அமிருடின் ஷாரி
14 நவம்பர் 2025, 8:29 AM
தொடர்புடைய செய்திகள்
selangor
சிலாங்கூர் மாநிலம் முழுவதும் உள்ளாட்சி அமைப்புகளில் சீர்திருத்தங்கள்; அடுத்தாண்டு முழுவதும் மேற்கொள்ளப்படவுள்ளன
Mavitthran
14 நவம்பர் 2025

selangor
மாநில மக்கள் நல்வாழ்வை முன்னிருத்திய சிலாங்கூர் மாநில பட்ஜெட்- ஒரு சிறப்புப் பார்வை
Mavitthran
18 நவம்பர் 2025

infographic
இது உங்களுக்கான சிலாங்கூர் பட்ஜெட் 2026 இன் உதவி திட்டம்
Kathiravan Manoharan
18 நவம்பர் 2025

selangor
சிலாங்கூரின் குழந்தைகள் நலன் காக்கும் இல்டிசம் அனக் சிலாங்கூர்
Pakiya
14 நவம்பர் 2025

உங்கள் கருத்து என்ன?




