பொதுமக்கள் கார்னிவல் ப்ளூபிரிண்ட் மற்றும் i-SEED #KitaSelangor 2025 கலந்துக்கொள்ள அழைப்பு

13 நவம்பர் 2025, 10:05 AM
பொதுமக்கள் கார்னிவல் ப்ளூபிரிண்ட் மற்றும் i-SEED #KitaSelangor 2025 கலந்துக்கொள்ள அழைப்பு

ஷா ஆலாம், நவம்பர் 13: ப்ளூபிரிண்ட் & i-SEED #KitaSelangor 2025 கார்னிவல் என்பது சிலாங்கூர் மாநில அரசின் ஒருங்கிணைந்த முயற்சியாகும். இது சிலாங்கூர் மாநில வறுமை ஒழிப்பு நிரந்தரக்குழு தலைமையில், கோல லாங்காட் நிலம், மாவட்ட அலுவலகம் மற்றும் கோல லாங்காட் நகராண்மைக்கழகம் ஆகியவற்றின் ஒத்துழைப்புடன் நடைபெறுகிறது.

இந்த நிகழ்ச்சி, மாநிலத்தின் B40 சமூகத்தைச் சேர்ந்த சிறு தொழில் முனைவோர்களின் பொருளாதாரத்தை முன்னேற்ற நோக்கமாகக் கொண்டுள்ளது. மொத்தம் 40 பயனாளர்கள் ப்ளூபிரிண்ட் வறுமை ஒழிப்பு உதவித் திட்டம் மற்றும் i-SEED திட்டத்தின் கீழ் தங்களது தயாரிப்புகளை காட்சிப்படுத்தும் மற்றும் விற்பனை செய்யும் கடைகளை திறக்க உள்ளனர். கார்னிவல் முழுவதும் சுமார் 300 பங்கேற்பாளர்கள் கலந்து கொள்ளும் வேளையில் 10,000க்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் அவற்றில் தொழில்முனைவர் வெற்றி பகிர்வு, விளையாட்டு மற்றும் சமையல் போட்டிகள், குழந்தைகளுக்கான விளையாட்டு பகுதி, காவல்துறை (PDRM), தீயணைப்பு துறை (JBPM) கண்காட்சிகள், போக்குவரத்து அபராத தள்ளுபடி, மற்றும் இலவச சுகாதார பரிசோதனை போன்றவை இடம்பெறும்.

மேலும், TEKUN Nasional, AIM, MARA, HIJRAH Selangor, KOHIJRAH போன்ற நிதி நிறுவனங்கள் தொழில் மேம்பாட்டு பயிற்சிகளை வழங்கும். SME Corp, PUNB, HRD Corp ஆகியவை தொழில்முனைவோருக்கு ஆதரவாக சேர்ந்து செயல்படும். SIDEC, MDEC, SELDEC நிறுவனங்கள் டிஜிட்டல் முயற்சிகளை அறிமுகப்படுத்தும்.

இந்த கார்னிவலின் சிறப்பான நிகழ்வுகளில் ஒன்று ப்ளூபிரிண்ட் & i-SEED #KitaSelangor 2025 விருது வழங்கும் விழா ஆகும். இது விற்பனை வளர்ச்சி, தயாரிப்பு புதுமை, வணிக நிலைத்தன்மை, சமூக தாக்கம் மற்றும் டிஜிட்டல் தொழில்நுட்பப் பயன்பாடு ஆகிய அடிப்படையில் சிறு தொழில்முனைவோரின் சாதனைகளை பாராட்டுகிறது. இந்த அங்கீகாரம், தொழில்முனைவோருக்கு மேலும் ஊக்கத்தை அளித்து, அவர்களை மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக்கும் என நம்பப்படுகிறது.

இந்த கார்னிவல் சிலாங்கூரில் சிறு தொழில்முனைவோரின் சமூக-பொருளாதார முன்னேற்றத்திற்கு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது சந்தை வாய்ப்புகளை உருவாக்கி, வணிக நெட்வொர்க் விரிவாக்கம் செய்து, இளைஞர்களுக்கு தொழில்முனைவர் துறையின் திறனை வெளிப்படுத்தும். இந்த முயற்சி, அரசாங்க அமைப்புகள், நிதி நிறுவனங்கள் மற்றும் வணிக சமூகங்களின் ஒத்துழைப்பின் மூலம், மாநிலத்தின் உள்ளடக்கமும் நிலைத்தன்மையும் கொண்ட பொருளாதார வளர்ச்சி நோக்கத்தை வலுப்படுத்துகிறது.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.

Properties
MS: f922288e558c3b7b1d99bd47484377b4
EN: cd68e718a4d41dc8ef70c9d27c60e1f1
ZH: 100cdec69db9bc7fd9f175cab704a072
TA: 7b60ca9b9b7a9838dc33c5db6fb6f38c
TV-MS: 5c53513d790774360d169f98c36ce619