ஷா ஆலம், செப். 26 - நிலையான மற்றும் வாழக்கூடிய உலகத்தை உருவாக்குவதில் சிலாங்கூர் மற்றும் பொதுவாக தென்கிழக்காசியாவை சீனா நம்பலாம் என்று
என்று மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.
சீனாவுக்கான தனது அதிகாரப்பூர்வ பயணத்தின் ஒரு பகுதியாக பெய்ஜிங்கில் உள்ள பீக்கிங் பல்கலைக்கழகத்தில் உரை நிகழ்த்திய அமிருடின், அந்நாட்டின் குறிப்பிடத்தக்க பொருளாதார முன்னேற்றத்தைப் பாராட்டியதோடு எதிர்காலத்தை வடிவமைப்பதில் சீனா முக்கிய பங்கு வகிக்கும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.
கடந்த 1989 ஆம் ஆண்டு தனக்கு ஒன்பது வயதாக இருந்தபோது பெர்லின் சுவர் இடிக்கப்பட்டதை நினைவு கூர்ந்த அமிருடின், அது ஒரு திருப்புமுனை தருணம் என்பதோடு 36 ஆண்டுகளுக்குப் பிறகு சீனா எவ்வாறு மிகப்பெரிய வேகத்தில் முன்னேறியுள்ளது என்றும் விவரித்தார்.
நாடு இப்போது அதன் வெற்றிக்கான அங்கீகாரத்தைத் தேடுகிறது என்று நான் நம்புகிறேன். இது ஒரே இரவில் நடந்துவிடவில்லை என்று அவர் நேற்று கூறினார்.
எதிர்காலத்தை வடிவமைப்பதில் சீனா பெரும் பங்கு வகிக்கும் என்று நான் நம்புகிறேன். மேலும் சிலாங்கூர் மற்றும் தென்கிழக்காசியாவில் இன்னும் நிலையான, வாழக்கூடிய மற்றும் வளமான உலகத்தை நோக்கி நெருக்கமாக பணியாற்ற உங்களுக்கு நம்பகமான நண்பராக இருப்பதாக நான் நம்புகிறேன் என்றார் அவர்.
நம்பிக்கைக்கு பாத்திரமான நண்பராக நீங்கள் எங்களை கருதலாம்- சீனாவிடம் அமிருடின் வாக்குறுதி
26 செப்டெம்பர் 2025, 6:27 AM
தொடர்புடைய செய்திகள்
video
MB seru rakyat amal kesederhanaan, kukuh perpaduan menjelang Aidilfitri
Kathiravan Manoharan
19 மார்ச் 2026

selangor
சிலாங்கூர் மாநில மசூதியில் தினமும் 1,300 நோன்பு கஞ்சி பொட்டலங்கள் இலவசமாக விநியோகம்
Evelyn Moses
20 பிப்ரவரி 2026

selangor
கிள்ளான் துறைமுக விரிவாக்கத் திட்ட எதிர்ப்பு: மாநில ஆட்சிக்குழுக் கூட்டத்தில் விவாதிக்க மந்திரி புசார் தயார்
Mavitthran
12 பிப்ரவரி 2026

selangor
சீனப்புத்தாண்டு பண்டிகையை முன்னிட்டு ஜோம் ஷோப்பிங் பற்றுச்சீட்டுகள் வழங்கும் திட்டம்; மந்திரி புசார் வழங்கினார்
Mavitthran
9 பிப்ரவரி 2026

உங்கள் கருத்து என்ன?





