ஷா ஆலம், ஆக. 16- கிள்ளான், தாமான் செந்தோசாவில் உள்ள ஒரு கடை வீட்டில் இன்று காலை ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கிய முதியவர் உட்பட நான்கு பேர் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையினரால் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்.
மூன்று மாடி கட்டிடத்தின் முதல் தளத்தில் ஏற்பட்ட தீ விபத்தின் காரணமாக படிக்கட்டுகளில் அடர்ந்த புகை சூழ்ந்ததால் 17 முதல் 81 வயதுடைய அந்த நால்வரும் சிக்கிக்கொண்டதாக சிலாங்கூர் தீயணைப்பு துறையின் உதவி நடவடிக்கை இயக்குநர் அகமது முக்லிஸ் மொக்தார் தெரிவித்தார்.
முதல் தளத்தில் 20 x 30 சதுர அடி பரப்பளவு கொண்ட பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் 50 விழுக்காட்டுப் பகுதி சேதமடைந்தது. ஒரு ஆடவர் மற்றும் மூன்று பெண்கள் மூன்றாவது மாடியில் இருந்தனர், அவர்கள் பாதுகாப்பாக கீழே இறக்கப்பட்டனர் என்று அவர் இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
காலை 6.16 மணிக்கு தீ வெற்றிகரமாக கட்டுப்படுத்தப்பட்டது. அண்டலாஸ், தென் கிள்ளான் மற்றும் வட கிள்ளான் தீயணைப்பு நிலையங்களைச் சேர்ந்த 14 உறுப்பினர்கள் மற்றும் பணியாளர்கள் தீயை அணைக்கும் பணியை மேற்கொண்டனர் அவர் கூறினார்
கிள்ளான், தாமான் செந்தோசாவில் தீ! நால்வரை தீயணைப்பு வீரர்கள் மீட்டனர்
16 ஆகஸ்ட் 2025, 5:19 AM
தொடர்புடைய செய்திகள்
selangor
தாமான் பெர்டானா ஹைட்ஸில் காட்டுத் தீ!
Shalini Rajamogun
30 அக்டோபர் 2025

antarabangsa
சிங்கப்பூரில் மெரினா பே சாண்ட்ஸில் தீ விபத்து
Shalini Rajamogun
29 அக்டோபர் 2025

national
லங்காவியில் மூன்று பெர்ரி கப்பல்கள் தீயில் எரிந்து நாசம்
Shalini Rajamogun
28 அக்டோபர் 2025

antarabangsa
மேற்கு இந்தியாவில் பேருந்து தீப்பிடித்து எரிந்த சம்பவம்; 20 பேர் உயிரிழப்பு
Mavitthran
15 அக்டோபர் 2025

உங்கள் கருத்து என்ன?




