கோலாலம்பூர், ஆக. 8 - இங்குள்ள பந்தாய் டாலாமில் நேற்றிரவு ஏற்பட்ட தீ விபத்தில் மைடின் மார்ட் மற்றும் பாசார் ராயா கார்னிவல் உள்ளிட்ட நான்கு கடை வளாகங்கள் மற்றும் 14 குடியிருப்பு வீடுகள் மற்றும் நாசமாயின.
இந்த தீவிபத்து தொடர்பில் கோலாலம்பூர் செயல்பாட்டு மையத்திற்கு இரவு 11.11 மணிக்கு அவசர அழைப்பு வந்ததாக பந்தாய் டாலாம் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தின் தலைவர் முகமட் ஷாரகர் அசிஸி வான் சைட் கூறினார்.
இந்த தீ விபத்தில் சுமார் 0.074 ஹெக்டர் பரப்பளவு கொண்ட குடியிருப்புப் பகுதி மற்றும் 0.223 ஹெக்டர் பரப்பளவு கொண்ட கடை வளாகங்களில் சுமார் 80 விழுக்காட்டுப் பகுதி அழித்ததாக அவர் அறிக்கை ஒன்றில் கூறினார்.
பாசார் ராயா கார்னிவல் வர்த்தக மையத்தின் மேல் மாடி 100 அழிந்தது. மைடின் மார்ட்டின் கீழ்த் தளம் 20 விழுக்காடு பாதிக்கப்பட்டது. அதே நேரத்தில் அருகிலுள்ள உள்ள மற்ற மூன்று கடைகள் தலா 90 சதவீதம் அழிந்தன என்றார் அவர்.
இவ்விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும் அதிகாலை 1.49 மணியளவில் தீ வெற்றிகரமாக கட்டுப்படுத்தப்பட்டது என்றும் அவர் கூறினார்.
தீ விபத்துக்கான காரணம் குறித்து மலேசிய தீயணைப்பு மற்றும் மீட்பு தீயணைப்புத் துறையின் புலனாய்வுப் பிரிவு விசாரணை நடத்தி வருவதாக அவர் தெரிவித்தார்.
தலைநகர், பந்தாய் டாலாமில் தீ! 14 வீடுகள், நான்கு கடைகள் சேதம்
8 ஆகஸ்ட் 2025, 4:51 AM
தொடர்புடைய செய்திகள்
selangor
கிள்ளானில் உள்ள மூன்று தொழிற்சாலை வளாகங்களில் தீ விபத்து; மூன்று வளாகங்கள் தீக்கிரையானது
Mavitthran
10 மார்ச் 2026

national
பெரேடுவா தொழிற்சாலையின் மின்கம்பி சேமிப்பு கிடங்கில் தீ விபத்து
Rajah Ramaya
25 ஆகஸ்ட் 2025

national
வாகன பழுதுபார்ப்பு பட்டறையில் தீ விபத்து- 37 கார்கள், ஏழு மோட்டார் சைக்கிள்கள் நாசம்
Rajah Ramaya
25 ஆகஸ்ட் 2025

national
பினாங்கு பாலத்தில் மைவி வாகனம் தீப்பிடித்தது
Shalini Rajamogun
6 ஆகஸ்ட் 2025

உங்கள் கருத்து என்ன?




