ad

2,500 ஆமைகளை இந்தியாவுக்கு  கடத்த முயன்ற ஆடவர் கைது

7 ஆகஸ்ட் 2025, 9:23 AM
2,500 ஆமைகளை இந்தியாவுக்கு  கடத்த முயன்ற ஆடவர் கைது

புத்ராஜெயா, ஆக. 7- கடந்த செவ்வாய்க்கிழமை கோலாலம்பூர்  விமான நிலையத்தின் முதலாவது  முனையம் வழியாக சுமார் 348,000  வெள்ளி மதிப்புள்ள 2,500க்கும் மேற்பட்ட ஆமைகளை கடத்த முயன்ற சந்தேகத்தின் பேரில்  ஒரு இந்திய பிரஜை கைது செய்யப்பட்டார்.

இரவு 10.05 மணியளவில்
இந்தியாவின் பெங்களூருக்கு விமானத்தில் செல்லவிருந்த அந்த சந்தேக நபரின் பயணப்பெட்டியை புறப்படும் வாயிலில் ஸ்கேன் செய்தபோது சந்தேகத்திற்கிடமான பொருள் அதில்  இருப்பது தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து  அவ்வாடவர் கைது செய்யப்பட்டதாக எல்லைக் கட்டுப்பாடு மற்றும் பாதுகாப்பு நிறுவனம் (ஏ.கே.பி.எஸ்.) இன்று ஓர் அறிக்கையில் தெரிவித்தது.

அவரின் பயணப்பெட்டியை ஆய்வு செய்த போது அதன் உடற்பகுதிக்குள் ஆயிரக்கணக்கான சிவப்பு காதுகள் கொண்ட ஸ்லைடர் ஆமைகள் மறைத்து வைக்கப்பட்டுள்ளது தெரியவந்தது
என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அனைத்து ஆமைகளும்  மேல் விசாரணைக்காக கைப்பற்றப்பட்டுள்ளன.
இந்த வழக்கு 2010ஆம் ஆண்டு
வனவிலங்கு பாதுகாப்புச் சட்டம்  மற்றும் 2008ஆம் ஆண்டு
அழிந்து வரும் உயிரினங்கள் மீதான சர்வதேச வர்த்தகச் சட்டம்  ஆகியவற்றின் கீழ் விசாரிக்கப்படுகிறது.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.