ad
MEDIA STATEMENT

இஸ்தானா நெகாராவில் இன்று தலைமை நீதிபதி பதவி உறுதிமொழி எடுத்துக் கொண்டார்.

29 ஜூலை 2025, 8:19 AM
இஸ்தானா நெகாராவில்  இன்று தலைமை நீதிபதி பதவி உறுதிமொழி எடுத்துக் கொண்டார்.

கோலாலம்பூர், ஜூலை 29 - இன்று  மாட்சிமை தங்கிய மாமன்னர் சுல்தான் இப்ராஹிமிடமிருந்து நீதிபதி டத்தோ வான் அஹ்மாட் ஃபாரிட் வான் சாலே நாட்டின் தலைமை நீதிபதிக்கான  நியமன கடிதத்தை  பெற்றுக் கொண்டார். இஸ்தானா நெகாராவில்  நடைபெற்ற  இந்த  சடங்கில் அவர் பதவி உறுதிமொழியும் எடுத்துக் கொண்டார்.

இதற்கு முன்னர், மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதியாக இருந்த 62 வயதுடைய டத்தோ வான் அஹ்மாட், கூட்டரசு நீதிமன்ற நீதிபதிக்கான நியமனக் கடிதத்தையும் பெற்றார்.

கடந்த ஜூலை 2ஆம் தேதி பணி ஓய்வு பெற்ற துன் தெங்கு மைமுன் துவான் மாட் அவர்களுக்கு பதிலாக நாட்டின் 17ஆவது தலைமை நீதிபதியாக வான் அஹ்மாட் நியமிக்கப்பட்டார்.

இச்சடங்கில் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம், துணைப் பிரதமர்கள் டத்தோ ஸ்ரீ டாக்டர் அஹ்மாட் சாஹிட் ஹமிடி மற்றும் டத்தோ ஸ்ரீ ஃபடிலா யூசோஃப், சட்டம் மற்றும் கழகச் சீர்த்திருத்தத்திற்கான பிரதமர் துறை அமைச்சர் டத்தோ ஸ்ரீ அசாலினா ஒத்மான் சாயிட் ஆகியோர் கலந்து கொண்டனர்.

பெர்னாமா

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.