கோலாலம்பூர் , கிள்ளான், உலு லங்காட் உலு சிலாங்கூர், கோம்பக், பெட்டாலிங், கோலா லங்காட், மற்றும் சிப்பாங் ஆகியவை பாதிக்கப்பட்ட மாவட்டங்கள் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.கோலாலம்பூர் மற்றும் புத்ரா ஜெயாவிலும் இதே எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
பெர்லிஸ் மற்றும் மலாக்கா மற்றும் கெடா, பேராக், பகாங், நெகிரி செம்பிலான், ஜோகூர், சரவாக் மற்றும் சபா ஆகிய பல மாவட்டங்களிலும் இதே வானிலை இருக்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது என்று மெட் மலேசியா பேஸ்புக்கில் தெரிவித்துள்ளது.
ஒரு மணி நேரத்திற்கு 20 மில்லி மீட்டருக்கும் அதிகமான மழைப்பொழிவு அல்லது ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படும் இடியுடன் கூடிய மழைக்கான அறிகுறிகள் இருக்கும் போது எச்சரிக்கைகள் வெளியிடப்படுகின்றன.
இடியுடன் கூடிய மழை எச்சரிக்கைகள் என்பது ஒரு வெளியீட்டிற்கு ஆறு மணி நேரத்திற்கு மிகாமல் செல்லுபடியாகும் குறுகிய கால எச்சரிக்கைகள் ஆகும்.
சமீபத்திய மற்றும் துல்லியமான தகவல்களுக்கு http://www.met.gov.my, சமூக ஊடக வலைத் தளத்தைப் பார்க்கவும், myCuaca பயன்பாட்டைப் பதிவிறக்கவும் பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள்.