ad
ECONOMY

மஞ்சள் மற்றும் பச்சை மண்டலமான, மாவட்டங்களில் நடமாட்டக் கட்டுப்பாட்டு அவசியமற்றது. 

14 அக்டோபர் 2020, 4:32 AM
மஞ்சள் மற்றும் பச்சை மண்டலமான, மாவட்டங்களில் நடமாட்டக் கட்டுப்பாட்டு அவசியமற்றது. 

ஷா ஆலம் 14 அக்; - சிலாங்கூரில் ஒரு மாவட்டமாக இருப்பதால் சிகப்பு அல்லாத மஞ்சள் மற்றும் பச்சை மண்டலமான கோலச் சிலாங்கூர் மற்றும் சபாக்பெர்ணம் போன்ற மாவட்டங்களில் நிபந்தனையுடன் கூடிய நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையை விதிப்பது அப்பகுதி மக்களுக்கு வழங்கும் பெரிய தண்டனையாகும் அவர்களுக்கு இழைக்கப்படும் பெரிய அநீதியாகும் என்றார் சிலாங்கூர் மந்திரி புசார் மாண்புமிகு அமிருடின் ஷாரி.

குறைந்த வருமானத்தைக் கொண்ட அப்பகுதி மக்களின் பொருளாதாரத்தை மேலும் சீரழிக்கக் கூடியது என்றார் அவர். உதாரணமாகப் பள்ளிகளும் , பாலர்பள்ளிகளும் மூடப்பட்டுள்ளதால், பெற்றவர்கள் எப்படி நிம்மதியாகத் தொழிலைச் செய்ய முடியும். அவர்கள் பிள்ளைகளைக் கவனித்துக்கொள்ளத் தங்கள் தொழிலிருந்து விடுப்பு எடுத்துக்கொள்ள நேரிடுகிறது.

அதைப்போல் ஒரு, மாவட்டம் மூடப்படும் அல்லது நடமாட்டம் கட்டு படுத்தப்படும் பொழுது பல வகைகளில் மக்கள் பாதிக்கப் படுகின்றனர் என்றார் அவர்.

இன்று 14-10-2020  நள்ளிரவு 12.01 தொடங்கிச்  சிலாங்கூர் மாநிலம் முழுவதும் கோவிட்-19 நோய்த் தொற்றின் பரவலைக் கட்டுப்படுத்த, நிபந்தனையுடன் கூடிய நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணைப் பிறப்பிக்கப்பட்டுள்ளதைச் சிலாங்கூர் மந்திரி புசார் சாடியுள்ளார்

நேற்று 12 -10--2020ல்  பெட்டாலிங் மாவட்டத்தில் அதிகக் கோவிட்-19 சம்பவங்கள் பதிவானதைத் தொடர்ந்து போலீஸ், சுகாதார இலாக்கா,  பாதுகாப்பு துறை மற்றும் பல ஏஜென்சிகளுடன் தான் சந்திப்பு நடத்தியதில் பெட்டாலிங் மாவட்ட அளவில்  நிபந்தனையுடன் கூடிய நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணைப் பிறப்பிக்கப் படுவது குறித்து விவாதிக்கப் பட்டதாகக் கூறினார்.

ஆனால், சில நிமிடங்களுக்குப் பின் பாதுகாப்புக்கான முதன்மை அமைச்சர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் முழு சிலாங்கூரையும் உள்ளடக்கிய நிபந்தனையுடன் கூடிய நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணைக் குறித்து அறிவித்துள்ளது குறித்து ஆச்சரியம்  அடைந்ததாக மந்திரி புசார் டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரி.கூறினார்.

சிலாங்கூரில் கிள்ளான் மற்றும் பெட்டாலிங் மாவட்டம் தவிர்த்துக் கோம்பாக் மற்றும் உலு லங்காட் பகுதிகள் மட்டுமே கோவிட் -19 தொற்று குறித்த சம்பவங்களைக் கண்டுள்ளன, கோலசிலாங்கூர் மற்றும் சபா பெர்ணம் மாவட்டங்கள் பச்சை மண்டலங்களாகும் அப்படியிருக்கச் சிலாங்கூர் முழுமைக்குமான நிபந்தனையுடன் கூடிய நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணைப் பிறப்பிக்கப்பட்டுள்ளதாகப் பாதுகாப்புக்கான முதன்மை அமைச்சர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் அறிவித்துள்ளது

அது குறித்து மாநில அரசு அதன் கருத்தைத் தேசியப் பாதுகாப்பு மன்றத்திடம் வழங்கியுள்ளது என்றார் சிலாங்கூர் மந்திரி புசார் மாண்புமிகு அமிருடின் ஷாரி.

 

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.